கேரளாவில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - 36 வயது அம்மணி மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

36 year old lady rapes 9 year old boy in Kerala

கேரளாவில் 9 வயது சிறுவனை ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்திய 36 வயது பெண்மணி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தன்னிபள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மன நலம் பாதிக்கப்பட்டு அவருடைய டாக்டரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனை கவுன்சிலிங் செய்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்து சிறார்களுக்கு உதவும் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடைபெற்றது.

இதில் சிறுவனின் வீட்டிற்கு அருகே வசிக்கும் 36 வயது உறவுக்காரப் பெண் கடந்த ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தெரிய வந்தது. சிறுவனை அடித்து,மிரட்டி இச்சைக்கு பணிய வைத்ததால் அச்சிறுவன் மனரீதியில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

இதைத் தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் செய்ய போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணிடம் விசாரனை நடத்தி வரு கின்றனர்

You'r reading கேரளாவில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - 36 வயது அம்மணி மீது பாய்ந்தது போக்சோ சட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுக அணி: வேலூரில் ஏ.சி.சண்முகம்.. கடும் அதிருப்தியில் ரத்தத்தின் ரத்தங்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்