தமிழக வீரர்கள் இறுதிச் சடங்கில் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு!

tn cm, deputy cm, minister Nirmala attending CRPF jawans funeral

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த வீரர் சிவச்சந்திரனின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சவாலப்பேரியில் சுப்பிரமணியனின் இறுதிச் சடங்கில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். அந்தந்த மாவட்டங்களின் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களும் அரசு சார்பில் மரியாதை செலுத்துவதுடன் வீர மர ணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவியையும் வழங்குகின்றனர்.

You'r reading தமிழக வீரர்கள் இறுதிச் சடங்கில் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஷ்மீரில் வீர மரணமடைந்த 2 தமிழக வீரர்களின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்