காஷ்மீரின் புல் மாவாவில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

5 army men killed in encounter with terrorists in Kashmir

காஷ்மீரின் புல்மாவாவில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

புல்மாவா தாக்குதல் சம்பவம் நடந்து 4 நாட்களே ஆன நிலையில் பிங்க்லான் என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் சிலர் பதுங்கியுள்ள தகவல் கிடைத்து ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் வீட்டிற்குள் பதுங்கியபடி ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இன்று அதிகாலை முதல் இரு தரப்பிலும் சரமாரியாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு ராணுவ மேஜர் உள்பட 5 வீரர்கள் இரையாகி உள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டின் உரிமையாளரும் கொல்லப்பட்ட நிலையில் தீவிரவாதிகளைப் பிடிக்க ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

You'r reading காஷ்மீரின் புல் மாவாவில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டுமாம்..: காயத்ரி ரகுராமன் ட்வீட்டுக்கு நாம் தமிழர் செம பதிலடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்