சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு - இரு நாட்டு உறவு வலுப்பெறும் என சல்மான் உறுதி!

grand reception to Saudi crown at rashtrapati bhavan

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

தெற்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவூதி இளவரசர் சல்மான் 2 நாள் பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். அவரை மரபுகளை மீறி விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இன்று சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி விருந்தளித்து உபசரிக்கிறார். இதற்கு ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த சவூதி இளவரசரை ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் சல்மானை வரவேற்று உபசரித்தனர். இந்தியாவுடனான சவூதி அரேபியாவின் தொடர்பு என்பது இரு நாட்டு மக்களின் மரபணுவுடன் தொடர்புடையது என்ற சவூதி இளவரசர், தற்போதைய நட்பு வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்தார்.

You'r reading சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு - இரு நாட்டு உறவு வலுப்பெறும் என சல்மான் உறுதி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுக கூட்டணியில் வாசன் இணைகிறாரா? த.மா.கா.வில் வெடித்தது சர்ச்சை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்