சூட்கேசினுள் பெண்ணின் ஒரு பகுதி உடல் கண்டுபிடிப்பு! - லக்னோவில் பரபரப்பு

Body of woman found in a bag, probe launched in Lucknow

ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள இடத்தில் ஒரு சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியின் அருகில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது . சந்தேகத்திற்கிடமான தோற்றமுள்ளதாக தெரிந்த அந்த சூட்கேசை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது அதனுள் ஒரு பெண்ணின் ஒரு பகுதி உடல் இருந்தது தெரிய வந்தது. இதைக் கண்ட போலீசார் உடனடியாக மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனை மேற்கொண்டனர் .

பரிசோதனைக்குப் பின் பேசிய எஸ்.சி. ராவத்( எஸ்.பி), ``முதற்கட்ட விசாரணையின் முடிவில் இறந்தவர் 40 வயதைச் சேர்ந்த தொழிலாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டது . இருப்பினும், சூட்கேஸில் பெண்ணின் உடலின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டிருப்பதால், சரியான அடையாளத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அருகிலுள்ள பகுதிகளில் சி.சி.டிவி காட்சிகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார். இதற்கிடையே, அந்தப் பகுதியில் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சிவப்பு கலர் மையில் எழுதப்பட்டிருந்தது. இதை யார் எழுதினார்கள் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

You'r reading சூட்கேசினுள் பெண்ணின் ஒரு பகுதி உடல் கண்டுபிடிப்பு! - லக்னோவில் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி - முடிவுக்கு வந்தது இழுபறி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்