மனித வெடிகுண்டா மாறி பெண்ணை கொன்ற இளைஞர்!

A young man who killed a woman with a bomb

கேரளாவில் மனித வெடிகுண்டா மாறி பெண்ணை கொன்ற இளைஞரால் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி அருகே உள்ள நாய்க்கட்டி பகுதியில் வசித்து வந்தவர் பென்னி. இவரது பக்கத்து வீட்டில் அமினா என்ற பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பென்னி தனது பக்கத்து வீட்டில் அமினா மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அங்கு சென்றார்.

வீட்டுக்குள் அமினா அருகில் சென்றதும் பென்னி தனது உடம்பில் கட்டியிருந்த வெடிபொருட்களை வெடிக்க செய்தான். இதில் சம்பவ இடத்திலேயே அமினாவும், பென்னியும் பலியாகினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அந்த வீட்டுக்கு சடலங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பென்னி வீட்டில் சோதனை நடத்திய போது ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அமினா வீட்டுக்கு பென்னி ஏன் சென்றார்? மனித வெடிகுண்டாக மாறி அவரை கொல்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மிரட்டல்: நள்ளிரவில் பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை

You'r reading மனித வெடிகுண்டா மாறி பெண்ணை கொன்ற இளைஞர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்