இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்- அமெரிக்கா எச்சரிக்கை

Pakistan to use terrorism as a weapon against India

தீவிரவாத்தை, இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்துவதாக அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மிச்சேல் மோரெல் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவை பாகிஸ்தான் பரம எதிரியாக பார்த்து வருகிறது. காஷ்மீரை எப்படியாவது தங்கள் பக்கம் சேர்த்து விட வேண்டும் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது. அதற்காக தீவிரவாதிகளை ஊக்குவித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்தியாவுடன் நேரடியாக மோதினால் தனது டவுசர் கழண்டு விடும் என்று நன்றாக தெரிந்த பாகிஸ்தான் மறைமுகமாகவும், நேரடியாகவும் தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறது. இதனை அமெரிக்காவின் உளவுத்துறை முன்னாள் அதிகாரியும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மிச்சேல் மோரெல் இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாக பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் உருவாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு, தான்தோன்றிதனமாக இயங்கும் தீவிரவாத குழுக்கள், ஒருகாலத்தில், அந்நாட்டிற்கு எதிராக மாறும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர் குண்டுவெடிப்புகள் எதிரொலி: இலங்கை தேவாலயங்கள் அதிரடி முடிவு

You'r reading இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்- அமெரிக்கா எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்