முலாயமுக்கு உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி

Mulayam Singh Yadav was on Monday night admitted to a private hospital

சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு திடீரென நேற்றிரவு(ஜூன்10) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம்சிங் யாதவுக்கு கடந்த ஞாயிறன்று திடீரென ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அன்றே வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர்களின் அறிவுரைப்படி அவரை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்றனர். நள்ளிரவில் அவரை குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முன்னதாக, லக்னோவில் முலாயம்சிங் யாதவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

You'r reading முலாயமுக்கு உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திர மாநில ஆளுநரானார் சுஷ்மா ஸ்வராஜ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்