சந்திரயான்-2 விண்கலம் 22ல் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ அறிவிப்பு

Chandrayaan-2 launch on July 22, says ISRO days after first attempt was called off due to technical snag

சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவில் தண்ணீர் இருக்கிறதா? மனிதன் வாழும் சூழல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான அடையாளங்களை சந்திரயான்-1 கண்டுபிடித்தது. இதையடுத்து, நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக, 978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய லேண்டர், ரோவர் என்று அந்த விண்கலத்தில் 3 பெரிய கருவிகள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் அதிநவீன கேமராக்கள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன. ஓராண்டு ஆய்வில் ஈடுபடக் கூடிய ஆர்பிட்டரின் எடை மட்டுமே 2.4 டன்னாகும். எனவே, மிக அதிக எடை கொண்ட விண்கலத்தை அனுப்பும் ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்டில் சந்திரயான்-2 வி்ண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் கூட 14ம் தேதி தொடங்கியது. மறுநாள் அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 56 நிமிடங்கள் முன்னதாக, அதாவது காலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. ராக்கெட்டில் இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்கலம் செலுத்துவது நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விளக்கம் அளித்தது.

இந்நிலையில்், வரும் 22ம் தேதியன்று சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ இன்று அறிவித்திருக்கிறது. இந்த விண்கலம் 50 நாட்கள் பயணம் செய்து, நிலவின் தெற்கு துருவத்தில் தரையிறங்கும். நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை அறிவதற்கு இந்த விண்கலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். மேலும், நிலவின் பரப்பு குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவிருந்தது. நிலவின் தென்பகுதிக்கு உலகில் எந்த நாடும் விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-2 விண்கலத்தில் திடீர் கோளாறு ; மீண்டும் விண்ணில் பாய்வது எப்போது?

You'r reading சந்திரயான்-2 விண்கலம் 22ல் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் காலமானார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்