காவிரியில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லைக்கு வந்தது மேட்டூர் அணை நீர்மட்டம் உயருமா?

karnataka released more water in cauvery from krs and kabini dams

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக இருந்து வந்த நிலையில், தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்கிறது.

இந்நிலையில், கர்நாடகாவிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கர்நாடகம் கடந்்த சில மாதங்களாக காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல், ஏமாற்றி வந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், கடைசியாக கடந்த ஜூனில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, தமிழகத்திற்கு காவிரியில் ஜூ்ன் மாதம் வரை திறந்து விட வேண்டிய 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட கார்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. கடந்த மே மாதத்திற்குரிய 9.19 டிஎம்.சி தண்ணீரை திறந்து விட ஆணையம் உத்தரவிட்டு, இவ்வளவு நாட்களாகியும் கர்நாடக அரசு இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றும் புகார் கூறியது.

இதனால், மேட்டூர் அணையை திறக்க முடியாமல் குறுவை சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 40.43 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்பதால், உடனடியாக தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அரசு அப்போது கூறியது.

இதன்பின், கடந்த வாரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, கர்நாடக அரசு, அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர்(கேஆர்எஸ்) அணையில் இருந்து வினாடிக்கு 355 கன அடியும் திறந்து விட்டது.

கடந்த சில நாட்களாக குடகுமாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார்பேட்டை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதையடுத்து, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஜூலை 1ம் தேதி இந்த அணைக்கு வினாடிக்கு 771 கன அடி நீர்வரத்து இருந்தது. நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் வரத்து காணப்பட்டது.

இதனால், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து விநாடிக்கு 4,900 கன அடி நீரும், கபினியிலிருந்து 3,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளுக்கும் வரும் நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திற்கு 8 ஆயிரத்து 400 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதற்கிடையே, கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் வரும் நாட்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகமானால், விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு

You'r reading காவிரியில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லைக்கு வந்தது மேட்டூர் அணை நீர்மட்டம் உயருமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; சூர்யாவுக்கு 'ரஜினி' பாராட்டு..! வைகோ, வைரமுத்து, சீமானும் ஆதரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்