அநியாய மோசடி! - ரூ. 11ஆயிரம் கோடி பணம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஸ்வாகா!..

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,360 கோடி முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,360 கோடி முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் உள்ள வங்கி கிளையில், சட்ட விரோதமாகவும், உரிய அங்கீகாரம் பெறாமலும் பணப்பரிமாற்றம் நடந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள வங்கிக் கணக்குகளில் இருந்து வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இவ்வாறு முறைகேடாக ரூ.11,360 கோடி அளவக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாரணை அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பரிவர்த்தனை நடப்பதில் வங்கி நிர்வாகம் உறுதியாக உள்ளது. இந்த தகவல் செபி அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading அநியாய மோசடி! - ரூ. 11ஆயிரம் கோடி பணம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஸ்வாகா!.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘கோலி சோடா 2’ டிரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி (வீடியோ)

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்