ஜனாதிபதி உரையின் போது நாடாளுமன்றத்தில் சலசலப்பு..

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசினார். அப்போது அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(ஜன.31) தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாள் என்பதால், குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்ேபாது அவர் கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாம் மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சட்டங்களை இயற்ற வேண்டும். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாகிப் புனித தலத்திற்கான பாதையை குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு உருவாக்கித் தந்துள்ளது.

ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை ஏற்று அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடித்தது மிகவும் பாராட்டக்கூடியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்தது வரலாற்று சிறப்புமிக்கது. மேலும், ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசம் சமமாக வளர்ச்சியடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

போராட்டங்களில் வன்முறை என்பது ஜனநாயகத்தை பாதிக்கிறது. மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றியிருக்கிறோம்.

இவ்வாறு குடியரசு தலைவர் உரையாற்றும்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால், மைய அரங்கில் சில வினாடிகள் சலசலப்பு காணப்பட்டது.

You'r reading ஜனாதிபதி உரையின் போது நாடாளுமன்றத்தில் சலசலப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு.. மதுரை ஐகோர்ட் கிளை ஏற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்