பீகாருக்கு இன்னொரு தொல்லையாகப் பறவைக் காய்ச்சல் பீதி..

Bihar Animal Husbandry Department culled disposed over hundreds of chicken.

நூறு கோழிகள் புதைப்பு......

பீகாரில் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியதால், நூற்றுக்கணக்கான கோழிகள் கொன்று புதைக்கப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்தியாவில் சுமார் 900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில்தான் தலா 170க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பீகாரில் ஏழு பேருக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு இன்னொரு தொல்லையாகப் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது.

இதையடுத்து, அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், நோய் பரப்பும் அபாயம் உள்ள நூற்றுக்கணக்கான கோழிகளைக் கொன்று அவற்றை பாட்னா புறநகரில் குழிதோண்டிப் புதைத்தனர்.

You'r reading பீகாருக்கு இன்னொரு தொல்லையாகப் பறவைக் காய்ச்சல் பீதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்