தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

covid19 hit cases in tamilnadu raises to 74.

தமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 1300 பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது.இந்நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்த 43 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், டெல்லிக்குப் போய்விட்டுத் திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தந்தையை பறிகொடுத்த ஹாலிவுட் நடிகர்.. தாயும் மரண போராட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்