மகாராஷ்டிராவில் 891 பேருக்கு கொரோனா..

132 Coronavirus Deaths In India, 4,757 Cases So Far.

நாடு முழுவதும் 4,757 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் தற்போது வேகமாகப் பரவியிருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 4,757 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 132 பேர் உயிரிழந்துள்ளனர்.


மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டுமே 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, மும்பையில் 10 பேருக்கு உறுதியாகியிருந்தது. அதிலும், தாராவியில் உள்ள குடிசைப்பகுதிகளில் 2 பேருக்கு பரவியிருக்கிறது. 2வது இடத்தில் தமிழ்நாட்டில் 621 பேருக்கும், 3வதாக டெல்லியில் 528 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதற்கு, டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற சுமார் 1000 பேருக்குத் தொற்று உறுதியானதுதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

You'r reading மகாராஷ்டிராவில் 891 பேருக்கு கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சினேகா புருஷன் ஹேப்பி.. துப்புரவாளர் நடனத்தால் மகிழ்ச்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்