இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 312 பேர் பலி..

312 deaths and 14933 new #COVID19 cases reported in India in 24hrs.

இந்தியாவில் கொரோனாவால் 14 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 4 லட்சத்து 40,215 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. நாடு முழுவதும் தினமும் 14, 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று புதிதாக 14,933 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 40,215 ஆக அதிகரித்துள்ளது.


அதே போல், கொரோனா நோயாளிகள் 312 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 14,011 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 35,796 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டுமே 6283 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து தமிழகத்தில் 62,087 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 794 பேர் பலியாகியுள்ளனர். 3வது இடத்தில் டெல்லியில் 62,655 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 2232 பேர் பலியாகியுள்ளனர்,

You'r reading இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 312 பேர் பலி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமன்னாவுக்கு பட வாய்ப்பு இல்லையா? வெப் தளங்களில் கவனத்தை திருப்பினார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்