இந்தியாவில் கொரோனா பலி 15 ஆயிரத்தை நெருங்குகிறது..

465 deaths and 15,968 new #COVID19 cases reported in India in 24hrs.

இந்தியாவில் இது வரை கொரோனா நோய்க்கு 14,476 பேர் பலியாகியுள்ளனர். 4.5 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்கிறது. நாடு முழுவதும் தினமும் 14, 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று புதிதாக 15,968 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 56,183 ஆக அதிகரித்துள்ளது.


அதே போல், கொரோனா நோயாளிகள் 465 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 14,476 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் ஒரு லட்சத்து 39,010 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டுமே 6531 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் டெல்லியில் 66,602 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 2301 பேர் பலியாகியுள்ளனர், அடுத்து தமிழகத்தில் 64,603 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 833 பேர் பலியாகியுள்ளனர்.

You'r reading இந்தியாவில் கொரோனா பலி 15 ஆயிரத்தை நெருங்குகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் தொடர் இசை.. 27ம்தேதி நடக்கிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்