DYFI தொண்டர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை...கேரளாவில் பெரும் பரபரப்பு...!

Congress offices attacked over twin murder case

திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியைச் சேர்ந்த மிதிலாஜ் (32), ஹக் முகம்மது (28 ) ஆகிய 2 டிஒய்எப்ஐ நிர்வாகிகள் கடந்த 3 தினங்களுக்கு முன் இரவில் சரமாரியாக வெட்டிக் கொல்லப் பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அரசியல் முன் விரோதம் தான் கொலைக்கு காரணம் என தெரியவந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இளைஞர் காங்கிரஸ் மற்றும் டிஒய்எப்ஐ தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சி தான் இந்த இரட்டை கொலைக்கு காரணம் என கூறப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த இரட்டை கொலையைத் தொடர்ந்து கேரளா முழுவதும் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அலுவலகங்கள் சரமாரியாக தாக்கப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கண்ணூர் உட்பட பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் கல் வீசியும், வெடிகுண்டு வீசியும் தாக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் தொண்டர்களின் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பதிலுக்கு கண்ணூர் உள்பட சில பகுதிகளில் சிபிஎம் அலுவலகங்களும் தாக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தால் கடந்த 3 தினங்களாக கேரளா முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே இந்த கொலைக்கு காங்கிரஸ் எம்பி அடூர் பிரகாஷுக்கு தொடர்பு இருப்பதாகவும் சிபிஎம் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார்.

You'r reading DYFI தொண்டர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை...கேரளாவில் பெரும் பரபரப்பு...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 1 மாதத்திற்குள் 8 முறை - சிறுவனை விடாமல் துரத்திய பாம்பு..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்