இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு..

L.Adimoolam Elected as Chairman in Indian Newspaper Society.

இந்தியப் பத்திரிகைகள் சங்கத் தலைவராகத் தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களின் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் உரிமையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்தியப் பத்திரிகைகள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் நேற்று(செப்.25) பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் புதிய தலைவராகக் கோவை தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக பர்காயஸ்தா(ஆனந்த் பஜார்), மோகித்ஜெயின்(எகனாமிக் டைம்ஸ்), பொருளாளராக ராகேஷ் சர்மா(ஆஜ்சமாஜ்), பொதுச் செயலாளராக மனோஜ் பவுல் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், தினத்தந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினமலர் ஆர்.லட்சுமி பதி, தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உள்பட 38 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

You'r reading இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விழுப்புரம் மாவட்ட சத்துணவு மையங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்