மனதின் குரல் வெளி வந்துவிட்டது - ஏக சந்தோஷத்தில் பிரகாஷ் ராஜ்

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா குறித்த பாஜக தலைவர் அமித்ஷா பேச்சை, ldquoமனதின் குரல் வெளிவந்து விட்டது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி கேலி செய்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா குறித்த பாஜக தலைவர் அமித்ஷா பேச்சை, ’மனதின் குரல் வெளிவந்து விட்டது’ என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேலி செய்துள்ளார்.

கர்நாடகாவில் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமித்ஷா, "ஊழல் மலிந்த அரசுக்கு போட்டி வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசுக்குத் தான் முதல் இடம் கிடைக்கும்" என்று கூறினார். அதாவது சித்தராமையா என்று கூறுவதற்கு பதிலாக, பாஜக முன்னாள் முதல்வரான எடியூரப்பா பெயரை குறிப்பிட்டார்.

அப்போது அருகில் மற்றொருவர், அமித் ஷாவிடம் எடுத்துரைக்க மறுபடி சித்தராமையா அரசு என குறிப்பிட்டார். அப்போது எடியூரப்பாவும் அருகில் இருந்தார். அமித்ஷாவின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருவதை அனைவரும் அறிந்ததே. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து பாஜக அரசு மீதான விமர்சனங்களை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். ஜஸ்ட் ஆஸ்க் என்ற ஹேஸ்டேக்கில் பாஜகவின் பல நடவடிக்கைகளை கடுமையாக சாடி வருகிறார்.

இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக தேர்தல் அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் வேளையில் உண்மை கடைசியில் வெளிவந்து விட்டது. இதுதான் உங்களுடைய மனதின் குரலா?” என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மனதின் குரல் வெளி வந்துவிட்டது - ஏக சந்தோஷத்தில் பிரகாஷ் ராஜ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆம்புலன்ஸ் அனுப்புகிறேன்; மோடியை கீழ்ப்பாக்கம் கொண்டு செல்லுங்கள் - ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்