கோ கொரோனா மந்திரம் பலிக்கவில்லை.. மத்திய அமைச்சர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதி.

கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை இந்தியா கேட் முன் ஆட்களை திரட்டி கொரோனாவை விரட்டுவதற்காக 'கோ கொரோனா கோ கொரோனா' என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் அந்த நோயை விரட்டுவதற்காக பலரும் பல நூதனமான வழிமுறைகளை கையாண்டனர். வீட்டில் இருந்த பாத்திரங்களை எடுத்து தட்டுவது, மணி அடிப்பது, விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றுவது என பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டன. மத்திய அமைச்சர் ஒருவர் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் மும்பை இந்தியா கேட் முன் நின்று ஆட்களை திரட்டி 'கோ கொரோனா கோ கொரோனா' என கோஷமிட்டார். மத்திய அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் ராம்தாஸ் அதவாலே தான் இந்த வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அமைச்சர் ராம்தாசின் இந்த நடவடிக்கையை பலரும் கிண்டல் செய்த போதிலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை.

அமைச்சரின் இந்த 'கோ கொரோனா' வீடியோ . சமூக இணையதளங்களில் வைரலாக பரவியது. வெளிநாட்டினர் கூட தன்னுடைய மந்திரத்தை கூறி கொரோனாவை விரட்டி வருகின்றனர் என்று பின்னர் அமைச்சர் ராம்தாஸ் கூறினார். இந்நிலையில் அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவுக்கும் கொரோனா நோய் பரவியுள்ளது. இதையடுத்து இன்று அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜ்யசபா எம்பியான ராம்தாஸ் இந்திய குடியரசு கட்சி (ஏ) தலைவராக உள்ளார். பிரபல சினிமா நடிகையான பாயல் கோஷ் சமீபத்தில் இவரது கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You'r reading கோ கொரோனா மந்திரம் பலிக்கவில்லை.. மத்திய அமைச்சர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதி. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தக்காளியை வெச்சு எப்படி சுவையான மொறு மொறு தோசை பண்ணலாம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்