27 பள்ளிக் குழந்தைகளை காவு வாங்கிய கோர விபத்து!

ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் 27 பள்ளிக் குழந்தைகள் உட்பட 30 பேர் இறந்துள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் 27 பள்ளிக் குழந்தைகள் உட்பட 30 பேர் இறந்துள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டத்தின் நுர்பூர் பகுதியில், வாசிர் ராம் சிங் நினைவு பொதுப்பள்ளி என்ற பள்ளியின் வாகனம் 45 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளது. அப்போது குர்சல் பகுதியில் உள்ள நுர்பூர்-சம்பா சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து நிலை தடுமாறி 328 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் 27 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியர்கள் மற்றும் மற்றும் பேருந்தின் ஓட்டுனர் மதன் லால் (67) என 30 பேர் பலியாகினர். பலியான குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து நிலை தடுமாறி 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவுந்ததை அறிந்து அதிகாரிகள் அங்கு செல்வதற்கு முன்பே அப்பகுதி கிராம மக்கள் மீட்பு பணியில் இறங்கினர். மேலும், இதில் காயமடந்த 12 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 27 பள்ளிக் குழந்தைகளை காவு வாங்கிய கோர விபத்து! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யூ டியூப் பிரபலங்கள் திரண்டு நடத்திய போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்