சகோதரிகளை சுட்டுக் கொன்று காட்டுக்குள் வீசிய மர்ம நபர்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் சகோதரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சகோதரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எட்வா மாவட்டத்தில் 13 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவரும் நேற்று மாலை வெளியே சென்றுள்ளனர். வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை அவர்கள் இருவரும் வயல்வெளி ஒன்றில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கெலமுவில் உள்ள கிராமவாசிகள் சகோதரிகளின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனை அனுப்பி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சகோதரிகளின் தந்தை கூறியபோது, “இன்று காலையில் எங்கள் மகள்கள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது. எங்களுக்கு பகைவர்கள் யாரும் இல்லை. என் மகள்களை யார் கொன்றார்கள் எதற்காக கொன்றார்கள் என்று எனக்கு புரியவில்லை” என்று கூறி உள்ளார்.

உத்திரப்பிரதேச மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்த மீள்வதற்குள் தற்போது சகோதரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சகோதரிகளை சுட்டுக் கொன்று காட்டுக்குள் வீசிய மர்ம நபர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ப்ளாஸ்டிக்கை அழிக்கும் கிருமி...சர்வதேச பிரச்னைக்குப் பிறந்தது விடிவுகாலம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்