கடனைத் திரும்ப அளிக்கத் தயார்!- விஜய் மல்லையா

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தான் இந்தியாவில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயார் என அறிவித்துள்ளார்.

விஜய் மல்லையா இந்தியாவைச் சேர்ந்த சுமார் 13 வங்கிகளில் 9,000 கோடி கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரைப் இந்திய அதிகாரிகள் பிடித்து விசாரிப்பதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு தப்பியோடினார்.

அங்கிருந்து அவரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர, அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. இந்நிலையில் 9,000 கோடி கடனை திரும்பவும் செலுத்தாததால் உலகம் முழுவதும் இருக்கும் அவரின் சொத்துகளை முடக்க வழக்கு தொடர்ந்தன வங்கிகள்.

இதை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடியது மல்லையா தரப்பு. ஆனால், கடந்த மாதம் 8 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், '13 வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதைத் தடுக்க முடியாது' என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த தயார் என்றும் கடனைத் திரும்ப செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

You'r reading கடனைத் திரும்ப அளிக்கத் தயார்!- விஜய் மல்லையா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்