பணத்தைச் சுருட்டுவது தான் எதிர்கட்சிகளின் நோக்கம்- மோடி தாக்கு!

பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளை விமர்சனம் செய்தார்.

இன்னும் ஒரே ஆண்டில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக-வின் பிரசாரப் பயணத்தை மகரிலிருந்து மோடி ஆரம்பித்துள்ளார். மகரில் அவர் யோகி கபிரின் 500-வது பிறந்த நாளை ஒட்டி, சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘உத்தர பிரதேசத்தில் இதுவரை, நேருக்கு நேர் நிற்க சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் எல்லாம், தற்போது தோலோடு தோல் கோத்து ஒன்றாக நிற்கின்றனர். அது மக்களின் நலனில் அக்கறை கொண்டல்ல. அதிகாரத்தை கைப்பற்றவே அவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.

எப்படி பணத்தை வாரிச் சுருட்டுவது என்பது மட்டும் தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது’ என்று சமாஜ்வாதியையும் பகுஜன் சமாஜையும் சூசகமாக தாக்கியுள்ளார் மோடி. 

You'r reading பணத்தைச் சுருட்டுவது தான் எதிர்கட்சிகளின் நோக்கம்- மோடி தாக்கு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்கு பாய்கிறது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்