கையெழுத்துப் போடுவது தான் ஆளுநர் வேலை- புதுச்சேரி முதல்வர்

’முதல்வர் சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போடுவது மட்டும் தான் ஒரு துணை நிலை ஆளுநரின் வேலை’ எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தலைமை நிர்வாகமாக முதல்வரே செயல்படுவார் என்றும் அந்தப் பொறுப்பு ஆளுநருக்கு இல்லை என்றும் இன்று காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், மதியம், இந்தத் தீர்ப்பு புதுச்சேரி அரசுக்குப் பொருந்தாது என ஒரு டிஸ்க்லைமர் போட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

மாநில அரசா..? ஆளுநர் அதிகாரமா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இவ்விகாரம் குறித்துப் பேசுகையில், “துணை நிலை ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உண்டு. நாங்கள் அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவதுதான் துணை நிலை ஆளுநரின் வேலை” தீர்க்கமாகக் கூறியுள்ளார்.

You'r reading கையெழுத்துப் போடுவது தான் ஆளுநர் வேலை- புதுச்சேரி முதல்வர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹெச்-4 விசா - தாமதிக்கும் அறிவிப்பு... கிடைக்குமா நிம்மதி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்