கேரளாவில் கனமழை... ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு

கேரளாவில் கனமழை

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழையால், கேரளாவின் பல்வேறு சாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களும் நீரில் மூழ்கியிருப்பதால், சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்றுவரை, கேரளாவில் 8 ஆயிரத்து 33 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 693 பேர் 265 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கேரளாவில் கனமழைக்கு நேற்றுவரை பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

மழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இதனால், வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

You'r reading கேரளாவில் கனமழை... ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 105 அடியை எட்டியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்