ஹெச்சிஎல்லுக்கு புதிய தலைமை நிதி அதிகாரி

ஹெச்சிஎல்லுக்கு புதிய தலைமை நிதி அதிகாரி நியமனம்

இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் புதிய தலைமை நிதி அதிகாரியாக பிரடீக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார்.

தற்போதைய தலைமை நிதி அதிகாரி அனில் சானனா இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற இருப்பதை முன்னிட்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பிரடேக், ஹெச்சிஎல் நிறுவனத்தை விட்டு வெளியேறி 2012ம் ஆண்டு மீண்டும் இணைந்துள்ளார். அனில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

தலைமை நிதி அதிகாரியை தேர்ந்தெடுக்க ஒரு குழுவை ஹெச்சிஎல் நிறுவனம் அமைத்திருந்தது. நிறுவனத்தின் உள்ளே மற்றும் வெளியே உள்ள பொருத்தமான நபர்களை பரிசீலித்து பிரடீக் அகர்வாலை அக்குழு தேர்வு செய்துள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் ஆகியோர் அனிலுக்கு நன்றியும் பிரடீக்குக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஹெச்சிஎல்லுக்கு புதிய தலைமை நிதி அதிகாரி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்