காதலால் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்..!

அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்

இந்திய ராணுவ வீரர் அச்சுதானந்த் மிஸ்ரா இவர், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில், இவருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த காதல், காரணமாக பாகிஸ்தான் பெண்ணுடன் தான் பணியாற்றும் இடம், அங்கு நடக்கும் கூட்டங்கள் பற்றிய விபரங்கள் ஆகியவற்றை அவருடன் பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடுகளையும், உபி மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், மிஸ்ராவின் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட பாதுகாப்பு படைவீரர் மிஸ்ராவை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து மிஸ்ராவிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், அவரின் காதலி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

You'r reading காதலால் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈழப் போரில் திமுகவும் காங்கிரசும் போர்க்குற்றவாளிகள் - அதிமுக

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்