அசாம் மாநிலத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி

Bus accident in Assam 7 people dead

அசாம் மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் 7 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று பார்பேட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அடபாரி இடத்தின் அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, குளத்தில் பாய்ந்தது.

விபரீதத்தை உணர்ந்த பயணிகள், கூச்சலிட்டனர். சத்தத்தைக்கேட்டு அங்கு திரண்ட அடபாரி மக்கள், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுள் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மாயமான சிலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

You'r reading அசாம் மாநிலத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் தமிழக அரசில் வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்