இத்தனை ஆண்டு காலம்... பெருமையாக நினைக்கிறேன்... ஓய்வு அறிவித்ததாரா வாட்சன்?!

news about shane watson retirement

பெரிய தோல்விகளை இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி சந்தித்தது. கடைசி மூன்று போட்டிகளில் வென்றது ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்தது. இந்நிலையில் சென்னை அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. சீனியர் வீரர்களை தூக்க வேண்டும் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. நேற்று பேசிய தோனியும் அதற்கேற்ப, இளைஞர்களிடம் அணியை ஒப்படைக்க தகுந்த நேரம் இது தான் எனப் பேசினார்.

இந்நிலையில் சென்னை அணியின் மூத்த வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ``நேற்றைய போட்டிக்கு பின் ஓய்வு அறைக்கு சென்ற வாட்சன், ``நான் ஓய்வு பெறுகிறேன். சென்னை அணிக்காக இத்தனை ஆண்டுகாலம் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்" என உருக்கமாக தெரிவித்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் வாட்சன் தரப்பிலும், சிஎஸ்கே அணி தரப்பிலும் இன்னும் இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

You'r reading இத்தனை ஆண்டு காலம்... பெருமையாக நினைக்கிறேன்... ஓய்வு அறிவித்ததாரா வாட்சன்?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்