லோக்சபா தேர்தல்: பிரதமர் மோடி தீவிரவாதி போல் செயல்படுகிறார், நடிகை விஜயசாந்தி தாக்கு:

PM Modi looks like a terrorist, congress star Vijayashanthi attacks

பிரதமர் மோடி எந்த நேரத்தில் என்ன அறிவிக்கப் போகிறாரோ என்ற அச்சத்தில் நாட்டு மக்களை வைத்துள்ளார் என்றும், அவருடைய செயல்பாடுகள் ஒரு தீவிரவாதியைப் போல் உள்ளது என்றும் ராகுல் காந்தி முன்னிலையில் பிரதமர் மோடியை நடிகை விஜயசாந்தி வெளுத்து வாங்கியுள்ளார்.

 

தெலுங்கானாவில் இம்முறை காங்கிரஸ், பாஜக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரசில் நட்சத்திரப் பேச்சாளராக தெலுங்கு, தமிழ்த் திரையில் அதிரடி ஹீரோயினாக ஜொலித்த விஜயசாந்தி களம் இறக்கப்ட்டுள்ளார்.

தெலுங்கானாவில் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ஐதராபாத்தில் துவக்கி வைத்தார்.அப்போது பேசிய விஜயசாந்தி பிரதமர் மோடியை ஏகத்துக்கும் விமர்சித்து ஆவேசமாகப் பேசினார்.

தற்போதைய தேர்தல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே நடக்கும் யுத்தம் .இதில் மோடிக்கும் ராகுலுக்கும் இடையே தான் போட்டி .பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்பட்டு ஜனநாயகத்தை படுகொலை செய்து விட்டார்.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி முதல் புல்வாமா சம்பவம் வரை ஒரு சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார்.இதனால் பிரதமர் மோடி எந்த நேரத்தில் என்ன அறிவிக்கப் போகிறாரோ? என்ற அச்சத்திலேயே நாட்டு மக்கள் உள்ளனர். மோடியின் செயல் ஒரு தீவிரவாதியைப் போல உள்ளது என்று ராகுல் காந்தி முன்னிலையில் விஜயசாந்தி ஆவேசமாக பிரதமர் மோடியை தாக்கிப் பேசினார்

You'r reading லோக்சபா தேர்தல்: பிரதமர் மோடி தீவிரவாதி போல் செயல்படுகிறார், நடிகை விஜயசாந்தி தாக்கு: Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்