ஈபிஎஸ்ஓபிஎஸ் ஆட்சிக்கு நெருங்குமா ஆபத்து கனகராஜ் மரணம் எதிரொலி

admk majority position after kanagaraj death

அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை வீட்டில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக  இருந்தவர் கனகராஜ். கோவை, அதிமுக வட்டத்தில் மிகவும் முக்கியமான தலைவராக கனகராஜ் இருந்துள்ளார். அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம் அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்ட கனகராஜ் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதி இடங்கள் காலியாக இருந்தது. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளைத் தவிர்த்து, மீதமுள்ள 18 தொகுதிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதிமுக, திமுக, தேமுதிக, பாமக ஆகியவை பிரசாரப் பணிகளையும் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், கனகராஜின் திடீர் மரணத்தால், சூலூர் தொகுதி காலியாகிவிட்டது. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அவரக்குருச்சி ஆகிய தொகுதிகளின் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் போது, சூலூர் தொகுதி தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

You'r reading ஈபிஎஸ்ஓபிஎஸ் ஆட்சிக்கு நெருங்குமா ஆபத்து கனகராஜ் மரணம் எதிரொலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி - களத்தில் குதிக்கிறார் அய்யாக்கண்ணு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்