ஆதீனம் சொல்வது ஆதாரமற்றது! -அதற்கு அவசியமும் இல்லை எகிறி விளாசும் டிடிவி தினகரன்

ttv dinakaran slams madurai aadheenam

அதிமுகவுடன் அமமுக இணைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என மதுரை ஆதீனம் சொன்ன கருத்தை, உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும். மத்தியில் மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பு ஏற்பார் என்றவர், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக ஒருங்கிணைப்பாளரான டிடிவி தினகரனை, அதிமுகவில் மீண்டும் இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இவரது, கருத்தை மறுத்துள்ள டிடிவி தினகரன், ` அ.தி.மு.க.வில் இணைப்பதற்காகத் தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். 

You'r reading ஆதீனம் சொல்வது ஆதாரமற்றது! -அதற்கு அவசியமும் இல்லை எகிறி விளாசும் டிடிவி தினகரன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொகுதிக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டாரா சரத்குமார் –`நோ’ ரியாக்ஷன் 

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்