பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் - மயில்வேல் புதிய வேட்பாளரானார்

Election 2019, perikulam admk candidate changes

பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக மயில்வேல் என்பவரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை .

பெரியகுளம் தொகுதி கணக்கில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முருகனுக்கு உள்ளூர் அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கட்சிக்கு சம்பந்தமில்லாத சென்னையில் அரசுப் பணியில் உள்ளவரை வேட்பாளராக அறிவிப்பதா? என்ற எதிர்ப்பு கிளம்ப முருகனும் தயங்கினார். அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாகக் கூறி ஓபிஎஸ் செல்வாக்கில் சீட் வாங்கிய முருகன், பணியையும் ராஜினாமா செய்யாமல், தொகுதிக்குள்ளும் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் வேட்பாளர் மாற்றம் நிச்சயம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் புது வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை .

தற்போது தேனி அல்லிநகரம் ஜெ.பேரவை இணைச் செயலாளர் மயில்வேல் என்பவரை புதிய வேட்பாளராக அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

You'r reading பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் - மயில்வேல் புதிய வேட்பாளரானார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றமா..?குழப்பத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்