அதிமுகவின்nbspஎதிர்காலத்துக்காக அக்கட்சிக்கு ஆதரவு -ஜெ.தீபா அந்தர்பல்டி

j deepa announced to join admk election campaign

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்பதாக ஜெ.தீபா தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கடந்த 16ம் தேதியன்று தீபா கூறினார். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறி, வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதனால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், இப்போது தேர்தலில் போட்டியிடவில்லை, அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும், அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபடுவர். அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பிரசாரம் மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார். அதிமுகவின் எதிர்கால நலன் மட்டுமே முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

You'r reading அதிமுகவின்nbspஎதிர்காலத்துக்காக அக்கட்சிக்கு ஆதரவு -ஜெ.தீபா அந்தர்பல்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிவகார்த்திகேயன்.. சிம்பு..  அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்