புதிய முகங்களை தெரியவைக்கவே..பல்லக்கு தூக்கும் கமல்..

kamal haasan answered for election candidate selection

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அக்கட்சியின், துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில், மாபெரும் மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

ம.நீ.ம கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 50 சதவிகிதம் பேர் தொழிலதிபர்கள். கமீலா நாசர், பிக்பாஸ் புகழ் சினேகன், கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன்  ஆகியோரைத் தவிர வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் பரிச்சயம் இல்லாதவர்கள். புது முகங்கள். தேர்தலில், புதியவர்களைக் களத்தில் இறக்கி வெற்றி வாகை சூடுவது கடினம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாகக் கமலிடம் கேட்டதற்கு, தெரியாத முகங்களைத் தெரிய வைக்கவே நான் பல்லக்கு தூக்க உள்ளேன் என்று பதிலளித்தார்.

You'r reading புதிய முகங்களை தெரியவைக்கவே..பல்லக்கு தூக்கும் கமல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒருவழியாக என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்