அவமானம்! ஓட்டுக்காக இப்படியா மோடியை விளாசிய நடிகர் சித்தார்த்

modi use indian force for vote- siddhuarth

உயிர் தியாகம் செய்த வீரர்கள், விமான படையை வைத்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடியை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழ் திரை உலகில் சிறந்த கதாநாயகனாக வளர்ந்து வருபவர் நடிகர் சித்தார்த். நடிகர் என்ற போர்வை தாண்டி சிறந்த சமூக அக்கறை உள்ள முகமும் சித்தார்த்துக்கு உண்டு. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது நிவாரண பணிகளை தீவிரமாக செய்தவர். மேலும், எந்தவொரு அநீதிக்கும் எதிராக துணிச்சலாக குரல் கொடுப்பவர் நடிகர் சித்தார்த்.

தற்போது பிரதமர் மோடியை சித்தார்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்கு காரணம், அண்மையில் பிரதமர் மோடி பேசுகையில், முதல் முறையாக வாக்கு அளிப்பவர்கள் தங்கள் ஓட்டை பாலகோட் விமானப்படை தாக்குதல் செய்தவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா? புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு தலைவர்களும் மோடியின் இந்த பேச்சை விமர்சனம் செய்து இருந்தனர்.

இது குறித்து சித்தார்த், நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்கள், இந்திய விமான படையை வைத்து மோடி ஓட்டு கேக்கிறார். தேர்தல் ஆணையம் விழித்து கொள்ள வேண்டும். ஜனநாயகம் மாற்றப்படுகிறது. என்ன ஒரு வெட்கக்கேடு என்று மோடியை கடுமையாக சாடி இருந்தார்.

You'r reading அவமானம்! ஓட்டுக்காக இப்படியா மோடியை விளாசிய நடிகர் சித்தார்த் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘ஹெச்.ராஜாவுக்காக...’ பிரார்த்தனையில் குதித்த மதுரை ஆதீனம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்