மக்கள் நீதிபதிகளாக மாற வேண்டும்- வைகோ வேண்டுகோள்....

vaiko asked People need to be judges

மக்கள் நிதிபதிகளாக இருந்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் பிரசாரத்துக்கு மிகவும் குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உடுமலை தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். ஜனநாயகம் நிலைக்குமா அல்லது பாசிச மனோபாவம் கொண்ட அரசு நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.

எல்லா வகையிலும் மத்திய அரசு தமிழக அரசையை வஞ்சிக்கிறது. எனவே மக்கள் நீதிபதிகளாக இருந்து இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading மக்கள் நீதிபதிகளாக மாற வேண்டும்- வைகோ வேண்டுகோள்.... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எனக்கு ஓட்டுப்போடலைனா.. உங்களுக்கு சாபம் விட்டுருவேன்; மக்களை மிரட்டி ஓட்டுக் கேட்கும் பாஜகவின் சாக்ஷி மகாராஜ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்