4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு - விஜயகாந்த் அறிவிப்பு

Assembly by-election, Dmdk will support admk: Vijayakanth

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் வேட்பாள்ர்களை களத்தில் இறக்கியுள்ளது.

நடந்து முடிந்து மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி உடன்பாடு செய்ததன் அடிப்படையில், இந்த 4 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுகவுக்கு அந்தந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளிக்கின்றன.

இந்நிலையில் தான் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 4 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் படுவாரா? மாட்டாரா? என்பது குறித்து இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி!

You'r reading 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு - விஜயகாந்த் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘பிட்’ அடிக்க அனுமதி மறுப்பு...165 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை! –உ.பி.,யில் அவலம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்