தேர்தல் விதிகளை மீறாமல் பேசுங்கள்! தலைவர்களுக்கு முதல்வர் அறிவுரை!

cm adviced political leaders not to violate election model code while campaigning

அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுபவர்கள்(கமல்?) மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறுபவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு பேசினால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிப்பதற்காக முன்கூட்டியே நிதி ஒதுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் குடிநீர் சப்ளையை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் கூறினார்.

4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரச்சாரம் நாளை ஓய்வு...! பணப் பட்டுவாடா 'ஜரூர்'

You'r reading தேர்தல் விதிகளை மீறாமல் பேசுங்கள்! தலைவர்களுக்கு முதல்வர் அறிவுரை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘ஓ.பி.எஸ். கல்வெட்டை உடனடியாக அகற்றுங்கள்’ தங்கத்தமிழ்ச்செல்வன் விளாசல்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்