திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் - மு.க.ஸ்டாலின் கருத்து!

Election results: will work hard to fulfill the promises:Dmk president mk Stalin

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் திமுக அதிக தொகுதிகளில் வெற்றியை வசமாக்கியுள்ளது. இவ்வளவு பெரும் வெற்றி பெற்றாலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என எதிர்பார்த்த திமுகவுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சிவிட்டது. மத்தியில் மீண்டும் மோடியே பிரதமராகிறார். தமிழகத்திலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசும் கண்டம் தப்பி விட்டது

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தந்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்.
தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்._
ஜனநாயக முறைப்படி பிரதமர் மோடி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

You'r reading திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் - மு.க.ஸ்டாலின் கருத்து! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெற்றி தோல்வி சகஜம்... மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்..! டிடிவி தினகரன் கருத்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்