சுதந்திர தின விழா ஆளுநர் தேநீர் விருந்து

Governor hosts tea party to vips and freedom fighters

சென்னை ராஜ்பவனில் வி.ஐ.பி.க்கள் மற்றும் தியாகிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார்.

சென்னையில் அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ராஜ்பவனில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி, சுதந்திர தினத்தன்று மாலை 5 மணிக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வேலுமணி, விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் தியாகிகள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில், இசை நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

You'r reading சுதந்திர தின விழா ஆளுநர் தேநீர் விருந்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்