திமுகவில் தலைவர்களுக்கு பஞ்சமாகி விட்டது... அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Leaders shortage in DMK, Admk minister Jayakumar comments for appointing thanga Tamilselvan as propoganda secretary

திமுகவில் முக்கிய தலைவர்களுக்கு பஞ்சம் வந்து விட்டது போல, அதனால் மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வாரி வழங்குவதை பார்த்தால் எனக்கே சங்கடமாக உள்ளது என தங்க. தமிழ்செல்வனுக்கு பதவி கொடுத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு கொடுத்திருப்பதால் திமுகவிலேயே பலருக்கு வருத்தம் இருக்கும். அந்த இயக்கத்திற்காக எவ்வளவோ பேர் உழைத்து, ஓடாகத் தேய்ந்தனர். ஓடாக தேய்ந்தவர்கள், கடுமையாக உழைத்தவர்களை விட்டுவிட்டு, நேற்று வந்தவருக்கு பொறுப்பு கொடுத்திருக்கின்றனர்.
அதிமுகவில் இருந்து அமமுக, அப்புறம் அமமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு கொடுத்திருப்பதை திமுகவினரே சிந்திப்பர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது போல, திமுகவை இப்போது அதிமுகவினர் ஆக்கிரமித்துள்ளனர். அதிமுகவினரை தங்கள் கட்சிக்கு வரவழைத்து திமுக பதவி கொடுக்கிறது. திமுகவில் இப்படியொரு பஞ்சம் வந்துவிட்டது என நினைக்கும் போதுதான் சங்கடமாக இருக்கிறது.

திமுகவில் இப்போது ஜனநாயகம் இல்லை. ஒன்மேன் ஷோ நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அவரின் இந்த ஒன்மேன் ஷோ எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா..?அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா..? மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சுளீர்

You'r reading திமுகவில் தலைவர்களுக்கு பஞ்சமாகி விட்டது... அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமலாக்கத்துறையின் அடுத்த குறி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அவசர, அவசரமாக சம்மன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்