பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் - ராகுல் காந்தி

மக்கள்nbspபாஜக மீது கோபத்தில் உள்ளனர் - ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் புல்பூர், கோரக்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் கோரக்பூர், புல்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாஜக-வின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘மக்கள், பாஜக மீது கொண்ட கோபத்தையே இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பிரதிபலித்திருப்பதாகவும், தேர்தலில் மக்களின் முடிவு ஒரு நாள் இரவில் ஏற்பட்ட மாற்றம் அல்ல’ என்றும் கூறியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலத்தில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொகுதிகள் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், துணைமுதல்வர் கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் எம்.பிக்களாக இருந்த தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் - ராகுல் காந்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதா வீட்டிலேயே மயங்கினார்; முதலுதவி அளிக்கப்பட்டது - டாக்டர் சிவக்குமார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்