என்ன சொல்ல போகிறார் மோடி?.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. சில நாட்கள் முன் இந்தியா முழுவதும் 2.75 லட்சம் அளவு கொரோனா பாதிப்பு பதிவானது. கொரோனா தொடங்கியதில் இருந்து இது ஒருநாள் அதிகபட்சமாகும்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. தடுப்பூசிகளை போடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில், இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என மத்திய அரசு தகவல் சொல்லியுள்ளது. கொரோனா சூழல் குறித்து மோடி பேசலாம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதேபோல் ஒரு நாள் இரவில் பேசியவர் தான் இந்தியா முழுவதும் லாக் டவுன் அறிவிப்பை வெளியிட்டார். தற்போது அது போல் அறிவிப்பை வெளியிடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

You'r reading என்ன சொல்ல போகிறார் மோடி?.. இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்கள் மத்தியில் உரை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 11 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு புதிய ஆணை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்