பாசக்கார முதலமைச்சருக்காக கோவில்கட்டிய காவலர் !

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்காக போலீஸ்காரர் ஒருவர் கோவில் கட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நல்கொண்டா மாவட்டம் நிதிமனூரு கிராமத்தை சேர்ந்த சீனிவாசலு என்பவர் சாட்டப்பல் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், சந்திரசேகர் ராவின் தீவிர ஆதரவாளர். சந்திரசேகர் ராவ் மீது அளவு கடந்த மரியாதையும், பாசத்தையும் வைத்திருக்கிறார்.

இதனால், சந்திரசேகர் ராவுக்கு கோவில் கட்ட சீனிவாசலு முடிவு செய்து, இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், சீனிவாசலு தனது சொந்த ஊரான நிதிமனூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சந்திரசேகர் ராவுக்கு கோவில் கட்டும் பணி தொடங்கினார். கோவில் கட்டுவதற்காக, ரூ.2 லட்ம் செலவிட்டுள்ளார். கோவிலுக்குள் சந்திர சேகர் ராவின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், கோவிலை முதல்வர் சந்திரசேகர் ராவ் தான் திறக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலீஸ்காரர் ஒருவர் முதல்வருக்காக கோவில் கட்டியுள்ள சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

You'r reading பாசக்கார முதலமைச்சருக்காக கோவில்கட்டிய காவலர் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆசிரியரயை பாலியல் தொல்லை செய்த பத்திரிக்கையாளர்கள் கைது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்