இந்தியாவை ஒயிட் வாஷ் எங்களது இலக்கு - தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஓபன் டாக்

இந்தியாவை ஒயிட் வாஷ் எங்களது இலக்கு என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கூறியுள்ளார்.

இந்தியாவை ஒயிட் வாஷ் எங்களது இலக்கு என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ள ரபாடா, “நிச்சயமாக.. எங்களுக்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி என்று தெரிந்திருக்கிறது. மேலும், அவர்களுக்கு பதிலடி கொடுப்பது எப்படி என்றும் தெரியும்.

ஒவ்வொரு ஆட்டத்தையும் நாங்கள் வெற்றியுடன் முடிக்கவே விரும்புகிறோம். ஆகையால், இந்திய அணியை மொத்தமாக ஒயிட் வாஷ் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், விராட் கோலி குறித்து கூறியுள்ள ரபாடா, “இந்திய அணியினர் விராட் கோலியை சார்ந்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதே சமயம் எங்கள் அணியின் இரண்டு பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள். அதற்காக நான் இந்திய அணியில் தரமான வீரர்கள் இல்லை என்று கூறவில்லை. ஆனால், அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது. அவர்களில் கோலி தான் அதிக ரன்கள் குவித்து இருகிறார்.

அவரைப் போன்றவர்களுக்கு பந்துவீசுகையில் ரசித்து ஆடுகிறேன். அவரை ஆண்டின் சிறந்த வீரராக ஐசிசி தேர்வு செய்துள்ளது. எனவே, அவருக்கு இதைவிட சிறப்பாக பந்துவீசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading இந்தியாவை ஒயிட் வாஷ் எங்களது இலக்கு - தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஓபன் டாக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முடியலடா சாமி.. வாட்ஸ் அப்பில் வலம் வரும் வைரல் பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்