ஐபிஎல்-லில் தொடர் தோல்வியால் தகுதியற்றவர்களாக ஆகி விடுவோமா? பார்திவ் பட்டேல்

royal challengers bangalore team wicket keeper talks about today match

ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்வியை சந்துத்து வருவதால், தங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல என பெங்களூரு அணி வீரர் பார்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு  இடையே இன்று நடைபெறுகிறது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி விளையாடிய 4 ஆட்டங்களிலும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இன்று, சொந்த மைதானத்தில் நடக்கும் 5-வது போட்டியிலாவது ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு அணியின் கீப்பர் பார்திவ் பட்டேல், ‘விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்ததை சொல்வதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. 0-4 என கணக்கில், புள்ளி பட்டியளில் கடைசியாக இருக்கிறோம். இது உண்மைதான். ஆனால், இதே நிலை தொடராது. எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிகாட்டுவார்கள். தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தால், நாங்கள் தகுதியற்றவர்கள் என்றாகி விடாது’ என பேசினார்.

 

You'r reading ஐபிஎல்-லில் தொடர் தோல்வியால் தகுதியற்றவர்களாக ஆகி விடுவோமா? பார்திவ் பட்டேல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் எதிர்க்கட்சி வேட்பாளர் செய்த சேட்டை; வேடிக்கை பார்த்து சிரித்த மக்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்