`எனக்கும் தலை வெடித்துவிடும் போல் உள்ளது - தோனியின் பேச்சு குறித்து சஹாரின் சகோதரி பதில்

malti chahar answers fans question about dhoni

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் சி.எஸ்.கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 160 ரன் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 161 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணி, கடைசி 2 ஓவரில் 39 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது 19வது ஓவரை வீச வந்தார் தீபக் சாஹர். இக்கட்டான நிலையில் பந்துவீச வந்த அவர் முதல் இரண்டு பந்துகளிலும் சொதப்பினார். அவர் வீசிய முதல் பந்து பாதியிலேயே கையில் இருந்து நழுவி, ஃபுல்டாஸ் பாலாக பேட்ஸ் மேனிடமிருந்து விலகி பவுண்டரியானது.

கூடவே ப்ரீ ஹிட் கொடுக்கப்பட்டது. அடுத்த பந்தையும் பின்னர் சஹார் போட்ட அடுத்த பந்தும் ‘நோ பால்’ ஆகி 2 ரன்னை எதிரணிக்கு பெற்றுத் தந்தது. இதனால் சென்னையில் கூல் கேப்டன் தோனி கடுப்பாகி, நேராக சாஹரிடம் வந்து கோபமாக பேசினார். இந்த காட்சிகள் வைரலாகியது. அவரிடம் தோனி என்ன பேசினார் எனத் தெரியாமலே இருந்தது. இதனை தெரிந்துகொள்ள ஆர்வப்பட்ட ரசிகர் ஒருவர் சாஹரின் சகோதரியான மால்தி சஹாரிடம் இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அவர், ``அவன் என்னிடமும் கூறவில்லை. அது தெரிந்துகொள்ளாமல் எனக்கும் தலை வெடித்துவிடும் போல் உள்ளது" எனப் பதிவிட்டார். அவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மால்தி கடந்த சீசன் முதல் தனது சகோதரர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நேரில் கண்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். அப்படி வரும் போது டிவி திரையில் காண்பிக்கப்பட்டே மால்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது குறிப்பிடத்தக்கது.

You'r reading `எனக்கும் தலை வெடித்துவிடும் போல் உள்ளது - தோனியின் பேச்சு குறித்து சஹாரின் சகோதரி பதில் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 185 வேட்பாளர்கள் போட்டியிடும் நிஜாமாபாத் தொகுதி: சின்னத்தை கண்டுபிடிக்கவே அரை மணி நேரம் ஆகும்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்